• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளா வெள்ள நிவாரண நிதியாக தெலங்கானா அரசு ரூ.25 கோடி வழங்கியது!

August 18, 2018 தண்டோரா குழு

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு தெலுங்கான அரசு சார்பில் ரூ.25 கோடி நிதியுதவி வழங்கி தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது.100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத கனமழையால்,பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 உயிரிழந்துள்ளனர்.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பேரழிவை சந்தித்திருக்கும் கேரள மாநிலத்திற்கு பலரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.அந்த வகையில் கேரளா வெள்ள நிவாரண நிதியாக தெலங்கானா அரசு ரூ.25 கோடி வழங்குவதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.மேலும்,கேரள மாநிலத்துக்கு டெல்லி அரசு ரூ.10 கோடி,கர்நாடக 10கோடி,பஞ்சாப் 10 கோடி,தமிழ்நாடு 10 கோடி,ஆந்திரா 5 கோடி,ஒரிசா 5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.

மேலும் படிக்க