August 24, 2018
தண்டோரா குழு
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 361 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.மழை வெள்ளத்தால் கேரளாவில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாகின.இதனால் வீடுகளை இழந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்னர்.பேரிடர் குழு விரைவாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்திற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது.தமிழகத்திலிருந்து அரசியல் கட்சிகள் முதல் நடிகர்கள்,பொதுமக்கள் என பலரும் உதவி செய்து வருகின்றனர்.இதனிடையே கனமழை பாதிப்பையடுத்து இந்த ஆண்டு ஓணம் கொண்ட்டாட்டங்களை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்து இருந்தது.
இந்நிலையில் கேரளால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் எனவும்,வரலாறு காணாத வெள்ளத்தை சந்தித்து மீண்டு வந்ததை போல, மறுகட்டமைப்பிலும் சாதனை படைப்போம் என முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.