• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரச்சனைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் – பாகிஸ்தான்

October 8, 2016 தண்டோரா குழு

காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவின் யூரி பகுதியில் இந்திய ராணுவ முகாம் மீது அதிகாலை நேரத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தது.

எல்லைப் பகுதியில் தொடர்ந்து இரு நாட்டு ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக எல்லையோர மக்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்து வருகின்றனர். இரு நாட்டு எல்லைப் பகுதியிலும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில், இந்தியாவின் தாக்குதல்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

அதில், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல. காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும். காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். காஷ்மீரில் இந்தியா செய்து வரும் அட்டூழியங்களை உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு பின்னர் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் படிக்க