• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடக தேர்தலுக்கு பின் காவிரி வழக்கு – உச்சநீதிமன்றம்

May 8, 2018 தண்டோரா குழு

காவிரி நதிநீர் பங்கீடு வரைவு திட்டத்தை மே 14ந் தேதி தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் துவங்கியது.அப்போது வாதாடிய மத்திய அரசு காவிரி வரைவு திட்டம் இறுதி வடிவத்தில் இருப்பதால் மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வாதிட்டது.எனவே,மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து,காவிரி வரைவு திட்ட அறிக்கையை 14-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு மேலும் காலவ அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும்,மே 14ந் தேதி நீர்வளத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி காவிரி நதிநீர் பங்கீடு வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மே 12ம் தேதி கர்நாடக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் மே 14ந் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படாததால் தமிழக விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க