• Download mobile app
06 May 2026, WednesdayEdition - 3738
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

20 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது -கமல்

November 7, 2018 தண்டோரா குழு

20 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி மக்களை சந்தித்து வருகிறார். அதைப்போல் ஆளும் கட்சி குறித்தும் அமைச்சர்கள் குறித்தும் தொடர்ந்து விமர்சனம் செய்தும் வருகிறார்.

இதற்கிடையில்,இன்று கமல்ஹாசனின் 64வது பிறந்தநாளையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.இந்நிலையில்,ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன்,

“நான் எந்த கட்சிக்கும் குழலோ ஊதுகுழலோ கிடையாது;நான் மக்களின் கருவி.அரசியலில் சுகாதாரம் இருக்க வேண்டும்.ஊழலற்ற சுகாதாரமான அரசியல் தேவை என்பதில் மக்கள் நீதி மய்யம் உறுதியாக உள்ளது.20 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது”. என கூறியுள்ளார்.

மேலும் படிக்க