• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கஜா புயல் நிவாரண பணிகளுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

November 21, 2018 தண்டோரா குழு

கஜா புயல் நிவாராணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி விடுவித்தது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,திருச்சி,திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.இதுவரை நடந்த கணக்கெடுப்பின்படி 12 மாவட்டங்களில் 88,102 ஹெக்டேர் வேளாண்,தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பு என தகவல் தெரிவிக்கின்றது.12 மாவட்டங்களில் 32,707 ஹெக்டேர் நெல், 30,100 ஹெக்டேர் தென்னை, 7,636 ஹெக்டேர் மக்காச்சோளம் சேதம் அடைந்துள்ளன.புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில்,கஜா புயல் நிவாராணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி ஒத்துக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.இந்நிலையில்,அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,

1. உயிரிழப்பு,கால்நடை,உடைமைகளுக்காக ₹205.87 கோடி

2. வீடுகள் சேதம் – ₹100 கோடி

3. பயிர் சேதம் – ₹350 கோடி

4. சாலை,குடிநீர் உட்பட உள்கட்டமைப்பு – ₹102.5 கோடி

5. மீன்வளம் – ₹41.63 கோடி

6. மின்சாரம் – ₹200கோடி

மொத்தம்- ₹1000 கோடி என பிரிவு வாரியாக நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க