• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கஜா புயல் : லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ரூ.1.01 கோடி நிதியுதவி

November 20, 2018 தண்டோரா குழு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகளுக்காக லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ரூ.1.01 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.

கஜா புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தஞ்சை,நாகை,திருவாரூர் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இப்புயலின் தாக்கத்தால் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன.புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து,‘கஜா’ புயலில் இருந்து மீண்டுவர பலரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகின்றனர்.நடிகர்கள் ரஜினிகாந்த்,விஜய்,விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்,இயக்குநர் ஷங்கர்,கவிஞர் வைரமுத்து,சூர்யா,கார்த்தி,ஜோதிகா உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் என பலரும் நிவாரண நிதி வழங்கியுள்ளனர்.இந்நிலையில்,பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் கஜா புயல் நிவாரண நிதியாக 1 கோடியே ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக லைகா குழுமம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,கஜா புயலால் 7 மாவட்டத்தில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.இப்புயலின் மீட்பு நடவடிக்கைகளுக்காகவும் மக்களின் துயர் துடைக்கவும் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் லைகா குழுமம் 1 கோடியே ஒரு லட்சம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க