November 21, 2018
தண்டோரா குழு
மத்திய அரசிடம் தைரியமாக நிதி கேட்டால் தேவையான நிதி கிடைக்கும் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.கஜா புயலுக்கு திமுக அறிவித்த ரூ.1 கோடி நிவாரண தொகையை சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து திமுக பொருளாளர் துரைமுருகன் வழங்கினார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு திமுக துணை நிற்கும்.மீட்பு பணிகளில் திமுக அரசியல் பார்க்கவில்லை,அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம்.மத்திய அரசிடம் கேட்கின்ற விதத்தில் அதிகாரமுடன்,தைரியமாக கேட்டால் தான் கேட்ட நிதியை பெற முடியும்”.இவ்வாறு அவர் கூறினார்.