• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கஜா புயல் காரணமாக மாலை 6 மணிக்குமேல் பேருந்து,மின்சார சேவை நிறுத்தம்!

November 15, 2018 தண்டோரா குழு

கஜா புயல் காரணமாக தமிழகத்தில் நாகை,கடலூர்,தஞ்சாவூர்,புதுக்கோட்டை,ராமநாதபுரம்,திருவாரூர்,காரைக்கால் ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இந்நிலையில்,இந்த மாவட்டங்களில் மாலை 6 மணியளவில் பேருந்துகள் நிறுத்தபட்டு மின்சாரமும் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்படுள்ளது.

தமிழகத்தில் பீதியை கிளப்பியுள்ள கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கவுள்ளது.புயல் கரையை கடக்கும் பொழுது கடலோர மாவட்டங்களில் மிக கனமான மழை மற்றும் மிகவேகமாக காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் அரசு சார்பில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மேலும்,கஜா புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய 7 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மாலை 4 மணிக்கு முன்பே வீட்டுக்கு அனுப்பவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதனை தொடர்ந்து புயல் பாதிப்பு விடப்பட்டுள்ள அந்த 7 மாவட்டங்களில் மாலை 6 மணிக்குமேல் பேருந்து சேவை மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் அறிவிகப்பட்டுள்ளது.

மேலும் படிக்க