November 20, 2018
தண்டோரா குழு
கஜா புயல் பாதிப்பிற்காக இயக்குநர் ஷங்கர் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ 10 லட்சம் வழங்கியுள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,புயலாக மாறியது கஜா புயல்.இந்த கஜா புயல் நாகை – வேதாரண்யம் இடையே கரையை கடந்தது.கஜா புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தஞ்சை,நாகை,திருவாரூர் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.இப்புயலின் தாக்கத்தால் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன.புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து,‘கஜா’ புயலில் இருந்து மீண்டுவர பலரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகின்றனர்.சூர்யா, கார்த்தி, ஜோதிகா உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர்.அதைபோல் நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சமும்,சிவகார்த்திகேயன் 10 லட்மும் நிவாரணம் வழங்கினார்.
இந்நிலையில்,கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இயக்குனர் ஷங்கர் தமிழக முதல்வரின் நிவாரண நிதி மூலமாக பத்து லட்சம் ரூபாய் (10 லட்சம்) நிதி உதவியை (ஆன்லைன் RTGS மூலம்) இன்று வழங்கினார்.