November 20, 2018
தண்டோரா குழு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது ரசிகர்கள் மூலம் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் நாகை மாவட்டம், நாகப்பட்டினம்,வேதாரண்யம்,தலைஞாயிறு,கீழையூர்,கீழ்வேளூர் வட்டாரப்பகுதிகள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.இதுவரை இல்லாத அளவில் கிராமப்புற மக்கள்,விவசாயிகள்,மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.விவசாயிகளின் 20 ஆண்டுகால உழைப்பையும் நாசம் செய்துள்ளது இந்தப் புயல்.மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தஞ்சை,நாகை,திருவாரூர் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இப்புயலின் தாக்கத்தால் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன.புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 56,942 குடிசை வீடுகள் முழுமையாகவும் 3,404 குடிசை வீடுகள் பகுதியாகவும்,30,328 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் நிவாரணப் பொருட்களையும், நிதியுதவியையும் அளித்து வருகின்றனர். மக்களுக்கு தேவையான அணைத்து உதவியும் செய்து வருகின்றனர்.அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி,சிவகார்த்திகேயன்,ரஜினிகாந்த்,நடிகர் சிவகுமார் குடும்பம் உட்பட பலரும் நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில்,தற்போது நடிகர் விஜய் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.