November 19, 2018
தண்டோரா குழு
கஜா புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகர் சிவகுமார்,சூர்யா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,புயலாக மாறியது கஜா புயலால் தஞ்சை,நாகை,திருவாரூர் மாவட்டங்களில் பல்லாயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.இப்புயலின் தாக்கத்தால் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன.புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து,புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில்,நடிகர் சிவகுமார், சூர்யா,கார்த்தி,ஜோதிகா,2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் தொண்டு நிறுவனத்தின் மூலம் ரூ.50 லட்சம் நிதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.