November 17, 2018
தண்டோரா குழு
நடிகர் ரஜினிகாந்த் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்விட்டரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,புயலாக மாறியது கஜா புயல்.இந்த கஜா புயல் நாகை – வேதாரண்யம் இடையே கரையை கடந்தது.கஜா புயல் நாகை,தஞ்சை,புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.கஜா புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன.பலி எண்ணிக்கை 36 -ஐ தொட்டுள்ளது.
புயல் பாதித்த 10 மாவட்டங்களில் 1,27,448 மரங்கள் விழுந்துள்ளன.புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருக்கிறது.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்விட்டரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆறுதல்கள்.பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல உதவிகளைச் செய்து வரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை பாராட்டுகிறேன்.நமது நிவாரண உதவிகள் தொடரட்டும்”. எனக் கூறியுள்ளார்.