• Download mobile app
16 Feb 2026, MondayEdition - 3659
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜப்பானில் கடும் நிலநடுக்கம் 6.2 ரிக்டராக பதிவு

November 12, 2016 தண்டோரா குழு

ஜப்பானில் வெள்ளிக்கிழமை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டராகப் பதிவாகியுள்ளது.

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவிலிருந்து சுமார் 350 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹோன்ஷு தீவில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 6.42 மணி அளவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால், அங்கு இருந்த வீடுகள் குலுங்கின. பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. ஹோன்ஷு தீவு பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 44 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் உருவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ நேர்ந்ததாகத் தகவல் இல்லை. மேலும் அங்கு சுனாமி எச்சரிக்கையும் தரபடவில்லை.

நான்கு டெக்டானிக் அடுக்குகள் சந்தியில் ஜப்பான் இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் பல பூகம்பங்களை அந்நாடு அனுபவித்து வருகிறது. ஆனால், திடமான கட்டடம் குறியீடுகள் மற்றும் கடுமையான அமலாக்க வடிவங்கள் பெரும்பாலும் சிறிய சேதங்களை உண்டாக்கும்.

2011ஆம் ஆண்டில், கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தால், சுனாமி எச்சரிக்கை மணி ஜப்பான் நாட்டின் வடகிழக்கு கடற்கரையில் மூழ்கடித்தது. மேலும் சுமார் 18,000 க்கும் மேற்பட்டோரின் கதி என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. ஃபுகுஷிமா அணு ஆலையில் மூன்று உலைகள் உருகிப் போயின.

ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்ப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் குமமாட்டோ பகுதியில் 2 பெரும் நிலநடுக்கங்களும் 1700 நில அதிர்வுகளும் ஏற்பட்டது. அதில் 50 பேர் உயிரிழந்தனர் மற்றும் பரவலான சேதம் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க