• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கலைப்பு ஏன் ? – ஆளுநர் விளக்கம்

November 22, 2018 தண்டோரா குழு

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் முப்தி முகம்மது சயீத் மறைவுக்குப் பின்னர் அவரது மகள்,மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி,பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது.ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு இடையே மோதல் வெடித்ததை அடுத்து,கூட்டணியில் இருந்து விலகுவதாக பாஜக அறிவித்தது.இதையடுத்து,தனது முதலமைச்சர் பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார்.

இதனால் பாஜக,மக்கள் ஜனநாயக கூட்டணி அரசு கவிழ்ந்தது இதனால் சட்டமன்றம் முடக்கப்பட்டிருந்தது.காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இன்று மெஹபூபா உரிமை கோரினார்.இதனைஅடுத்து 5 மாதங்களாக முடக்கப்பட்டிருந்த நேற்றிரவு சட்டமன்றத்தை கலைக்கும் படி ஆளுநர் சத்தியபால் மாலிக் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, ஆளுநரின் இந்த நடவடிக்கையை பலரும் விமர்சித்தனர்.

இந்நிலையில்,இது குறித்து ஆளுநர் சத்யபால் மாலிக்,

“சட்டமன்ற கலைப்பு என்பது தவறான தருணத்தில் எடுக்கப்பட்டது இல்லை,சரியான நேரத்தில் எடுக்கப்பட்டது.குதிரை பேரம் நடப்பதாக இரு தரப்பிலிருந்தும் தகவல் வந்தது.மாநிலத்தில் தற்போதுதான் பாதுகாப்பு நிலைமை சிறப்பாக இருக்கிறது.ஊடுருவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.கல் எறியும் சம்பவம் நடக்கவில்லை.உள்ளாட்சி தேர்தல் சுமூகமாக நடந்துள்ளது.இந்த தருணத்தில் குழப்பம் ஏற்படுத்துவது மாநிலத்தின் நலனுக்கு ஏற்றது அல்ல,இக்கட்சிகளில் எவருக்கும் பெரும்பான்மை இல்லை.ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையுடன் யாரும் வரவில்லை.கடந்த ஐந்து மாதங்களாக ஜனநாயகம் செயல்பட்டு கொண்டுதான் இருந்தது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்பட்டது.ஆனால்,அபாயம் ஏற்படும் நிலை வந்ததால் சட்டசபை கலைக்க வேண்டியதாகிவிட்டது.

மேலும் மெஹபூபா,தன்னுடைய அழைப்புகள் மற்றும் பேக்ஸ்களை பார்க்கவில்லை என்று ஆளுநர் மீது புகார் வைத்தது குறித்து பேசிய ஆளுநர்,நேற்று மிலாது நபி என்பதால் ஆளுநர் மாளிகையில் ஊழியர்கள் யாரும் இல்லை.இதற்கு முன்பாகவே அவர் என்னை சந்திருக்க வேண்டும்.அவருடைய பேக்ஸ்ஸுகள் எனக்கு கிடைத்திருந்தாலும் என்னுடைய முடிவில் எந்தவித மாற்றமும் நிகழ்ந்திருக்காது”என்றுக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க