• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வழக்கை தொடர்ந்து நடத்தி இது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன் – டிடிவி தினகரன்

November 17, 2018 தண்டோரா குழு

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனை விடுவிக்க நீதிமன்றம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.மேலும்,டி.டி.வி தினகரன் டிசம்பர் 4ம் தேதி நேரில் பட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,வழக்கை தொடர்ந்து நடத்தி இது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன் என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“சிலரது சதியின் காரணமாக இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து என்னை விடுவிக்கச் சொல்லி நான் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி,இது பொய் வழக்குதான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன்”. எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க