November 17, 2018
தண்டோரா குழு
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனை விடுவிக்க நீதிமன்றம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.மேலும்,டி.டி.வி தினகரன் டிசம்பர் 4ம் தேதி நேரில் பட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்,வழக்கை தொடர்ந்து நடத்தி இது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன் என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“சிலரது சதியின் காரணமாக இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து என்னை விடுவிக்கச் சொல்லி நான் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி,இது பொய் வழக்குதான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன்”. எனக் கூறியுள்ளார்.