• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குஜராத்தில் சர்வதேச பட்டம் விடும் போட்டி

January 8, 2018 தண்டோரா குழு

சர்வதேச பட்டம் விடும் போட்டியை அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஞாயிற்றுக்கிழமை(ஜனவரி 7) தொடங்கி வைத்தார்.

குஜராத் மாநிலத்தின்அகமதாபாத் நகரிலுள்ள சபர்மதி ஆற்றுக்கரையில், சர்வதேச பட்டம் விட்டும் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த போட்டியை குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் விஜய் ரூபாணி நேற்று(ஜன 7) தொடங்கி வைத்தார்.

குஜராத்தில் சுமார் ஒரு வாரம் நடைபெறும் இந்த போட்டியில் இங்கிலாந்து,தென் கொரியா, மலேசியா, சீனா, இந்தோனேசியா, நியூசிலாந்து உள்ளிட்ட 44 நாடுகளில் இருந்து, சுமார் 150 பேர் இந்த போட்டியில் கலந்துக்கொண்டுள்ளனர். மேலும், இந்தியாவின் 18 மாநிலங்களில் இருந்து, சுமார் 100 பேரும் அகமதாபாத் நகரில் இருந்து நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்துக்கொண்டனர்.

பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் இந்த போட்டியில் பங்குபெற இந்தியா வந்துள்ளனர். அதேபோல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்களும் இதில் கலந்துக்கொண்டனர். குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில், சுமார் 8 நாள், இந்த போட்டி நடைபெறும். இந்த பட்டம் விடும் விழா, சுமார் 3 லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பு தரும்” என்று அந்த மாநிலத்தின் முதலைமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க