• Download mobile app
07 Mar 2026, SaturdayEdition - 3678
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் மிக பழமையான போர்க்கப்பலுக்கு பிரியாவிடை

October 24, 2016 தண்டோரா குழு

உலகின் மிகப் பழமையான விமானம் தாங்கி போர் கப்பல் ஐஎன்எஸ் விராட், இந்திய கடற்படை சேவையில் இருந்து விடைபெறுகிறது.

இந்தியக் கடற்படையில் சுமார் 55 ஆண்டுகளும் கடற்படையில் 27 ஆண்டுகளும் பணிபுரிந்த மிக பழமையான விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விராட் இந்த ஆண்டின் இறுதியில் ஓய்வு பெறுகிறது.

கடற்படையில் இருந்து ஐஎன்எஸ் விராட் ஓய்வு பெற்றதும் அதை வாங்கி, விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தி வைத்து, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ஆந்திர மாநில அரசு விருப்பம் தெரிவித்தது. அதன் விருப்பத்தை கடற்படை நிர்வாகமும் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் விராட் ஞாயிற்றுக்கிழமை மும்பை துறைமுகத்தை நோக்கி தனது இறுதிப் பயணத்தை தொடங்கியது. மூன்று இழுவை கப்பல்கள் அதை இழுத்துச் சென்றபோது, இந்திய கடற்படையின் தென்னக கடற்படை கமாண்டர் ’ரியர் அட்மிரல், நட்கர்னி உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் அதற்கு பிரியாவிடை கொடுத்து அதை வழியனுப்பி வைத்தனர்.

மும்பையில் முறைப்படி அதற்கு பிரியாவிடை அளிக்கும் விழா நடத்தப்படும் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க