• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு

November 21, 2017 தண்டோரா குழு

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக, இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது.

ஐ.நா பொதுசபையில் உள்ள 193 உறுப்பு நாடுகள் மற்றும் ஐ.நா பாதுகாப்பு சபையில் உள்ள 15 உறுப்பு நாடுகளும் வாக்களித்து நீதிபதிகளை தேர்வு செய்யும்.இந்நிலையில் இந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் பிரேசில்,லெபனான்,பிரான்ஸ்,சோமாலியா நாடுகளிலிருந்து தலா ஒரு நீதிபதி தேர்வு செய்யப்பட்டனர்.இதனையடுத்து மீதமுள்ள ஒரு நீதிபதிக்கு இந்தியாவைச் சேர்ந்த தல்வீர் பண்டாரியும் இங்கிலாந்தை சேர்ந்த கிரீன் உட்டும் போட்டியிட்டனர்.

இந்நிலையில்,ஐ.நா. பொதுச்சபையும், பாதுகாப்பு சபையும் நேற்று கூடியது. நீதிபதிக்கான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிரீன் உட், நீதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

இதையடுத்து, சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரியே மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் படிக்க