• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய பெண் கீதா கோபிநாத்க்கு ஐ எம் எஃப்பின் முக்கிய பதவி!

October 2, 2018 தண்டோரா குழு

ஐ எம் எஃப் சர்வதேச நாணய நிதியத்திற்கு தலைமை பொருளாதார நிபுணராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த கீதா கோபிநாத்(46) பொருளாதாரம் மற்றும் செலாவனி குறித்த பணிகளில் திறம்பட செயல்படுபவர் என அறியப்பட்டவர்.தற்போது இப்பதவியில் இயங்கிவரும் மௌரிஸ் அப்ஸ்ட்ஃபெல்ட் கடந்த ஜூலை மாதத்தில் ஓய்வு பெற்றார்.இதையடுத்து அவருக்கு அடுத்தபடியாக இப்பதவிக்கு கீதா கோபிநாத் வரவுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை நிர்வாகி பதவியை ஏற்கவுள்ள முதல் பெண்மணி இவர்.

கீதா கோபிநாத் தற்போது கேரள முதலமைச்சர் பினராய் விஜயனின் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.ஐ எம் எஃப்பின் இப்பதவிக்கு வரும் இரண்டாவது இந்தியர் இவர் தான்.இதற்கு முன் முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் இப்பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க