• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காலால் மிகப்பெரிய ஓவியம் வரைந்து உலக சாதனை படைத்த ஹைதராபாத் மாணவி

December 30, 2017 தண்டோரா குழு

ஹைதராபாத் நகரை சேர்ந்த மாணவி ஒருவர் காலால் வரைந்த ஓவியம் உலக சாதனை படைத்துள்ளது.தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் ஜானவி மாகண்டி(18). அவர் சுமார் 140 சதுர அடியில், தனது காலால் ஓவியம் ஒன்றை வரைந்தார். அந்த ஓவியம் உலக சாதனை படைத்துள்ளது. பிரிட்டினில் உள்ள வார்விக் பல்கலைக்கழகத்தின் மாணவி சுமார் 100 சதுர அடியில் வரையப்பட்ட ஓவியம் தான் இதற்கு முன் உலக சாதனையாக இருந்தது தற்போது அந்த சாதனையை ஜானவி முறியடித்துள்ளார்.

ஜானவியின் பொழுதுபோக்குகளில் ஓவியம் வரைதலும் ஒன்று.அதோடு,அவர் ஒரு கலைஞர், நடன கலைஞர்,கிளாசிகல் இசை பாடகர், மற்றும் தேசிய அளவிலான கூடைப்பந்து வீரரும் கூட. நடனம் ஆடிக்கொண்டு இருக்கும்போது, காலால் ஓவியம் வரைய முடியும் என்பது அவருடைய தனிப்பட்ட திறமை ஆகும். அந்த திறமையை பயன்படுத்தி அவர் மயிலின் இறகையும், தாமரை மலரையும் தன்னுடைய காலால் வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க