• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கனமழை காரணமாக கொல்லம்-செங்கோட்டை ரயில் சேவை நிறுத்தம்

August 15, 2018 தண்டோரா குழு

கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கொல்லம்-செங்கோட்டை இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது.நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி இதுவரை 39 பேர் பலியாகி உள்ளனர்.50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் செங்கோட்டை-கொல்லம் இடையிலான ரயில்பாதையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும்,மண்சரிந்தும் தண்டவாளத்தில் விழுந்துள்ளன.இதனால் செங்கோட்டை-கொல்லம் தடத்தில் செல்ல வேண்டிய ரயில்கள் அனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும்,நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில் பாதையில் மண் சரிந்துள்ளதால் அந்தத் தடத்திலும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க