August 15, 2018
தண்டோரா குழு
கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கொல்லம்-செங்கோட்டை இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது.நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி இதுவரை 39 பேர் பலியாகி உள்ளனர்.50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் செங்கோட்டை-கொல்லம் இடையிலான ரயில்பாதையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும்,மண்சரிந்தும் தண்டவாளத்தில் விழுந்துள்ளன.இதனால் செங்கோட்டை-கொல்லம் தடத்தில் செல்ல வேண்டிய ரயில்கள் அனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும்,நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில் பாதையில் மண் சரிந்துள்ளதால் அந்தத் தடத்திலும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.