• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இறந்த பிறகும் மகளின் பிறந்த நாளுக்கு மலருடன் வாழ்த்து கூறும் தந்தை

November 28, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் இறந்துபோன தந்தையிடமிருந்து ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் மலர் கொத்து பெறும் ஒரு பெண்ணின் ட்விட்டர் பதிவு வைராலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தைச் சேர்ந்தவர் மைக்கல், இவர் தனது மகளான பெய்லி செல்லருக்கு 21 வயது ஆகும் வரை அவரது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மலர்ச்செண்டு வழங்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.

இந்நிலையில் மைக்கேல் செல்லர்ஸ் புற்று நோயால் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மரணம் அடைந்துவிட்டார். ஆனால் கடந்த 4 வருடங்களாக பெய்லிக்கு அவரது தந்தை சார்பில் சரியாக பிறந்த வாழ்த்து செய்தியோடு ஒவ்வொரு வருடமும் பூங்கொத்தும் வந்து இருக்கிறது.

தற்போது, பெய்லிக்கு 21வயது ஆகிறது. அவளுடைய தந்தையிடம் இருந்து கடைசி மலர் கொத்தையும் தனிப்பட்ட கடிதமும் அவளுக்கு கிடைத்து.

அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தாவது: “நாம் மீண்டும் சந்திக்கும் வரை, இதுவே என்னுடைய கடைசி கடிதம். எனக்காக நீ கண்ணீர் சிந்துவதை நான் விரும்பவில்லை. நான் வேறொரு நல்ல இடத்தில் இருக்கிறேன். மகிழ்ச்சியாக இரு. நான் எப்பொழுதும் உன்னுடன் இருக்கிறேன்” என்று எழுதப்படிருந்தது.

பெய்லி ஒவ்வொரு ஆண்டும் தனக்கு கிடைக்கும் மலர் கொத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். அதேபோல் இந்த ஆண்டும், தனது தந்தையிடம் இருந்து பெற்றுக்கொண்ட செய்தியை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.அந்த பதிவு வைராலாக பரவியுள்ளது.

மேலும் படிக்க