• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காந்தியடிகள் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காதி கிராப்ட்டில் சிறப்பு விற்பனை துவக்கம்

October 2, 2018 தண்டோரா குழு

காந்தியடிகள் 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவையில் காதி கிராப்ட்டில் காதி ஆடைகள் சிறப்பு விற்பனையை கோவை மாவட்ட ஆட்சியர் இன்று துவக்கி வைத்தார்.

காந்தியடிகள் 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவை அவிநாசி மேம்பாலம் அருகில் உள்ள காதி கிராப்ட் அலுவலகத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கி வைத்தார்.இவ்விழாவில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன்,மாவட்ட வருவாய் அலுவலர் கலந்துக் கொண்டனர்.

கடந்தாண்டு கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 1.53 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாகவும்,இந்தாண்டு 2.53 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளதாக தெரிவித்தனர்.கதர் ஆடை விற்பனையை ஊக்குவிக்க அனைத்து மக்களும் முன்வர வேண்டும் எனவும் இதில் வலியுறுத்தப்பட்டது.

மேலும்,கடந்தாண்டை போல நடப்பு ஆண்டிற்கும் மத்திய மாநில அரசுகள் கதர்,பட்டு,பாலியஸ்டர்,உல்லன் பொருட்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை அளிக்கப்பட்டுள்ளது.இவ்விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க