• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

January 28, 2017 தண்டோரா குழு

குஜராத் மாநிலத்தில் சனிக்கிழமை (ஜனவரி 28) அதிகாலையில் லாரியுடன் நேருக்கு நேராக கார் மோதியது. இந்த விபத்தில் 5 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தாராபூர் காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர், பண்டோர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

குஜராத் மாநிலத்தில் உள்ள போடாட் நகரில் திருமணத்திற்கு ஒரு குடும்பத்தை சேர்த்த ஆறு பேர் காரில் சென்றுகொண்டிருந்தனர். தாராபூர் வடமன் நெடுஞ்சாலையில் எதிரே வந்த சரக்கு வண்டியுடன் நேருக்கு நேராக மோதியதில் 5 வயது குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் காரில் இருந்த நீட்டா தொபாரியா (32), ஆசிஷ் (27), மந்தன் (5) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அந்த விபத்தை குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அந்த விபத்தில் படுகாயம் அடைந்த சேத்தன் தொபாரியா (32) அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மனிஷா மற்றும் விபுல் தொபாரியா ஆகிய இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க