• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாயமான விமானத்தைத் தேடும் பணியில் மேலும் இரு கப்பல்கள்

August 5, 2016 தண்டோரா குழு

29 பேருடன் மாயமான விமானப் படை விமானத்தைத் தேடும் பணியில் மேலும் 2 கப்பல்களை ஈடுபடுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து 29 பேருடன் அந்தமான் புறப்பட்ட விமானப் படைக்கு சொந்தமான ஏ.என் 32 ரக விமானம் மாயமாகி 15 நாட்களாகியும், விமானம் குறித்து எவ்வித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

போர்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், விமானங்கள் உள்ளிட்டவற்றின் உதவியோடு தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றாலும் விமானத்தைக் கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது. நட்புறவு பயணமாக இந்தியா வந்த ரஷ்ய நாட்டின் அதிநவீன கப்பலான இகோர் பிலோசோவும் கடந்த 2 நாட்களாகத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

கடலுக்குள் மூழ்கும் கப்பல்களையே கண்டறியும் வசதி கொண்ட மேற்கண்ட ரஷ்ய கப்பல் மூலம் நடைபெற்ற தேடுதல் பணியும் பலன் தரவில்லை. இதனையடுத்து இந்திய கடல்சார் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் சமுத்திர ரத்னாகர் மற்றும் சாகர் நிதி ஆகிய கப்பல்களை மாயமான விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபடுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க