• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேஸ்புக் பயன்படுத்துவதற்கும் ஆதார் அட்டை கட்டாயம்

December 27, 2017 தண்டோரா குழு

இந்தியாவில் இனி பேஸ்புக் பயன்படுத்துவதற்கும் ஆதார் எண்ணைக் கேட்டுப்பெறும் நடைமுறையை, அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தபடும் சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக்கை இந்தியாவில் 24.1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

உலக அளவில் பேஸ்புக் பயன்பாட்டில் அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இந்தியா 2வது இடத்தில் இருந்து வருகிறது. எனினும் இந்தியாவில் உள்ள பேஸ்புக் கணக்குகளில் ஏராளமானவை போலியானவை என தெரிய வந்துள்ளது.

இதனால் போலி கணக்குகள் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக, பேஸ்புக் பயன்படுத்துவோரின் ஆதார் எண்ணை வைத்து, அவர் உண்மையான பெயரில் தான் கணக்கு வைத்துள்ளாரா என பேஸ்புக் சரிபார்க்க முடிவு செய்துள்ளது.மொபைல் பேஸ்புக் இணையதளத்தில் இது சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.

பயனர்கள் பெயரின் முதல் மற்றும் கடைசிப் பகுதி மட்டும், ஸ்கிரீன் ஷாட் மூலம் கேட்டுப் பெறப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.பயனர்களின் இயற்பெயரையே, ஃபேஸ்புக்கிலும் பயன்படுத்துவதற்கான சாத்தியத்தை அதிகப்படுத்தவே ஆதார் பெயரை கேட்டுப்பெறும் நடைமுறையை செயல்படுத்த இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நண்பர்களும், உறவினர்களும் அவர்களை எளிதில் அடையாளம் காண முடியும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் கருதுகிறது. எனினும், இந்த நடைமுறை விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே தற்போது அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் பேஸ்புக் நிர்வாகிகள் கூறியுள்ளனர். ரெட்டிட், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் இந்த முறை சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க