• Download mobile app
21 Jun 2025, SaturdayEdition - 3419
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல் அறிவியல் கட்டாய பாடம்

September 17, 2016 தண்டோரா குழு

பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல் அறிவியலை கட்டாய பாடம் ஆக்குமாறு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

கடந்த 1991ம் ஆண்டு, அப்போதைய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இயற்க்கை சுற்றுசூழல் குறித்த பாடத்தை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக இருக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், அந்த உத்தரவு இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமல்படுத்தப்படவில்லை என்று, சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி.மேத்தா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அம்மனு, உச்சநீதிமன்ற, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது, பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல் அறிவியலை கட்டாய பாடமாக்க இதுவரை எடுத்த நடவடிக்கைகளை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், மனிதவள மேம்பாடு (மனிதவள மேம்பாடு அமைச்சகம்) எங்கள் திசைகளில் இணக்கமாய் இருக்க முகமையாக இருக்கட்டும். அவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் மற்றும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை மனிதவளத்துறை ஒரு பொதுவான மேடையில் அனைத்து பங்குதாரர்களின் கொண்டு வரட்டும்.

எங்களுடைய உத்தரவை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு எதிராக நாங்கள் வழக்கு தொடர்வோம் என்று தெரிவித்தார். மேலும், அடுத்த கட்ட விசாரணையை வரும் 23ம்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

மேலும் படிக்க