• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

5-வது டெஸ்ட் போட்டி : முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி477 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

December 17, 2016 தண்டோரா குழு

இந்தியாவிற்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 477 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னை எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 477 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மொயின் அலி 146 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர்.

இங்கிலாந்து அணி 477 ரன்களுக்கு ஆட்டமிழந்ததை தொடர்ந்து இந்திய அணியின் பார்த்திவ் பட்டேல், கே.எல். ராகுல் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

மேலும் படிக்க