• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேக்கம்பட்டியில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடங்கியது

January 4, 2018 தண்டோரா குழு

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் யானைகளுக்கு ஆண்டு தோறும் 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான யானைகள் நல வாழ்வு முகாமை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் இன்று (4ம் தேதி) துவங்கி பிப். 20ம் தேதி வரை 48 நாட்கள் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடக்கவுள்ளது.இந்த முகாமில், யானைகளுக்கு சத்தான இயற்கை, மூலிகை உணவுகள், ஆரோக்கியத்திற்கான குளியல் மற்றும் விளையாட்டு, மருத்துவம், உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் மூலம் புத்துணர்வு அளிக்கப்படுகிறது.

மேலும், நலவாழ்வு முகாமில் தமிழகத்தில் இருந்து 31, புதுச்சேரியில் இருந்து 2 யானைகள் பங்கேற்றுள்ளன. முகாமிற்கு வந்த யானைகளும் பவானி ஆற்றில் புனித நீராடிவிட்டு,நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க