காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 16ம் தேதி நடைபெறவுள்ளது என டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார்.இவர் கடந்த 1998ம் ஆண்டு கட்சியின் தலைமை பொறுப்பினை ஏற்றார்.காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவர் 19 ஆண்டுகள் நீடித்துள்ளார்.இந்நிலையில் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு,ராகுல் காந்தியை தலைவராக்க மூத்த தலைவர்கள் பலர் வலியுறுத்தினர்.
இதனையடுத்து,ராகுல் காந்தியை தலைவராக தேர்வு செய்யும் தீர்மானம் இன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மேலும், இந்த தேர்தலில் ராகுலை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றால் வேட்பு மனு தாக்கல் கடைசி நாளில் ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவருக்கான வேட்பு மனுதாக்கல் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி டிச.4ம் தேதி வரை நடைபெறும்.தேர்தல் முடிவுகள் 19 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி மாபெரும் விழிப்புணர்வு பேரணி
கோவையில் சூப்பர்ஸ்டார் பிரேஸ்லட் வகைகளை அறிமுகம் செய்தது பி.எம்.ஜெ. ஜூவல்ஸ்
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியீடு
சமூகத்தில் பெண்கள் சிறந்த ஆளுமைகளாக உருவெடுக்க வேண்டும் -உதவி கமிஷனர் அஜய் தங்கம் பேச்சு
சத்குரு தொடர்பான போலி மோசடி ஆன்லைன் பதிவுகளை நீக்க உத்தரவு – டெல்லி உயர் நீதிமன்றம்
சர்வதேச ஒலிம்பியாட் தேர்வில் கோவை மாணவர்கள் சாதனை