• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சத்தீஸ்கரில் நக்சலைட்டு தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் பலி

October 30, 2018 தண்டோரா குழு

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நக்சலைட்டுகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் ஒருவர் உட்பட,இரு பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் போல சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நக்சல்கள் தொடர்ந்து ஊடுருவி வருகின்றனர்.அவர்களுக்கு அவ்வபோது இந்திய பாதுகாப்பு படைப்படையினர் மற்றும் சத்தீஸ்கர் போலீசார் இணைந்து தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.இதற்கிடையில்,சத்தீஷ்கர் மாநிலத்தில் வரும் நவம்பர் 12 மற்றும் 20ம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில்,இன்று தண்டேவாடா அருகே அரான்பூரில் ஊடுருவிய நக்சல் தீவிரவாதிகள்,அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற தூர்தர்ஷன் குழுவினர் மற்றும் அவர்களுடன் சென்ற இரண்டு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.பதிலுக்கு பாதுகாப்பு வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும் நக்சல் தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் ஒருவரும்,2 பாதுகாப்பு படைவீரர்களும்உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான நிலைஉருவாகியுள்ளது.

இதைதொடர்ந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த மூன்று தினங்களுக்கு முன்,பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில்,மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 4 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க