• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மனநோயால் பாதிக்கப்பட்டவரின் வயிற்றிலிருந்து 639 ஆணிகள் அகற்றம்!

November 1, 2017 தண்டோரா குழு

கொல்கத்தாவில் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவரின் வயிற்றிலிருந்து சுமார் 639 ஆணிகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

மேற்கு வங்கத்தின் பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள கோபர்டங்கா பகுதியை சேர்ந்த 48 வயது நபர் ஒருவர் ‘ஸ்கைசோபிரீனியா’என்ற மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் ஆணி மற்றும் மண்ணை சில காலமாகவே உண்டு வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே அவருக்கு அதிக வயிற்று வலி ஏற்பட்டது.இதனையடுத்து அவருடைய குடும்பத்தினர் அவரை அருகிலிருந்த சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய வயிற்றில் ஆணிகளும் மண்ணும் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து உடனே அவரை கொல்கத்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறிய ஆலோசனையை கேட்ட அந்த நபரின் குடும்பத்தினர், அவரை அங்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் அவருக்கு எக்ஸ்ரே மற்றும் எண்டோஸ்கோபி சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையின் முடிவில், அவருடைய வயிற்றில் 2 முதல் 2.5 இன்ச் அளவுள்ள ஆணிகள் மற்றும் மண் இருப்பதும் தெரியவந்துள்ளது.இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சையின் போது “அவருடைய வயிற்றில் 10 சென்டிமீட்டர் அளவுக்கு வெட்டி,காந்தம் மூலம் வயிற்றில் இருந்த ஆணிகளை வெளியே எடுத்துள்ளனர். மேலும், இந்த அறுவை சிகிச்சை சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றதாகவும்,தற்போது நோயாளியின் உடல் நலம் சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க