• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கலைஞர் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும்! மருத்துவர் இராமதாசு அறிக்கை

August 7, 2018 தண்டோரா குழு

கலைஞர் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு அனுமதி கேட்டனர் ஆனால், நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க இயலவில்லை என்றும்,காமராஜர் நினைவகத்துக்கு அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதனால் திமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,கலைஞர் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

“திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் உடலை அடக்கம் செய்ய சென்னை மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்திருப்பது மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. இந்த விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்கள் எந்த வகையிலும் அரசியல் செய்யக்கூடாது.
மெரினா கடற்கரையில் தலைவர்கள் உடலை நல்லடக்கம் செய்வதற்கு எதிராக நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தான் மெரினா கடற்கரையில் கலைஞர் உடலை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க இயலவில்லை என்று தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்த போதும், மெரினாவில் தலைவர்கள் உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் இருந்தன.ஆனாலும்,அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்குள் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் அமைக்கப்படவிருக்கிறது.

அவ்வாறு இருக்கும் போது கலைஞரின் உடலை அடக்கம் செய்வதற்கு மட்டும் வழக்குகளைக் காரணம் காட்டுவது சரியல்ல.அரசியல்ரீதியிலான கருத்து வேறுபாடுகள் ஏராளமாக இருந்தாலும் கூட தமிழக அரசியலில் கலைஞர் தவிர்க்க முடியாத தலைவர்.80 ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் இருந்ததுடன்,தமிழகத்தின் முதலமைச்சராக மிக அதிக காலம் 19 ஆண்டுகள் பதவி வகித்தவர்.

அவரது மறைவும்,இறுதிச் சடங்குகளும் மிகவும் கவுரவமாக நடைபெற வேண்டும்.மெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்க அரசு மறுத்ததைக் கண்டித்து பல இடங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கத் தொடங்கியுள்ளன.இது மேலும் பெரிதாகாமல் தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

எனவே,இந்த விஷயத்தில் தேவையில்லாத அரசியல் செய்யாமல் சென்னை மெரினா கடற்கரையில் கலைஞரின் உடலை நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்”.

மேலும் படிக்க