• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விரைவில் தன் சொந்த குரலிலேயே கருணாநிதி நன்றி தெரிவிப்பார் – ஸ்டாலின்

July 27, 2018 தண்டோரா குழு

விரைவில் தன் சொந்த குரலிலேயே கருணாநிதி நன்றி தெரிவிப்பார் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடந்த 3 நாட்களாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்ட காவிரி மருத்துவமனை நிர்வாகம்,சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாகவே காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக அவர் இப்போது வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வருகிறார்.நோய் தொற்று காரணமாக யாரும் அவரை நேரில் சந்திக்க வேண்டாம் என கூறியிருந்தது.

இதற்கிடையில்,நேற்று முதல் தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களும் திமுக தொண்டர்களும்,கோபாலபுர இல்லத்தில் குவிந்த வண்ணமாக உள்ளனர்.பிரதமர் மோடி,குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரை கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில்,இதுதொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி,ராகுல் காந்தி,சீதாராம் யெச்சோரி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.மேலும், திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவர் நலம் பெற்று வருகிறார்.விரைவில் உடல்நலம் தேறி சொந்த குரலிலேயே கருணாநிதி நன்றி தெரிவிப்பார் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க