August 7, 2018
சட்டத்தைப் பார்க்காதீர்கள் சரித்திரத்தைப் பாருங்கள் மெரினாவில் கலைஞருக்கு இடம் கொடுங்கள் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு பிரதமர்,குடியரசுத் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மெரினாவில் அடக்கம் செய்வதற்கு அனுமதி கேட்டனர்.இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில்,நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க இயலவில்லை என்றும்,காமராஜர் நினைவகத்துக்கு அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதனால் திமுக தொண்டர்கள் வேண்டும் வேண்டும் மெரீனா வேண்டும் என காவிரி மருத்துவமனை முன்பு கோஷம் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில்,கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“கலைஞருக்குக் கடற்கரையில் இடம் கொடுங்கள்.சட்டத்தைப் பார்க்காதீர்கள்;அவர் சரித்திரத்தைப் பாருங்கள்”எனக் கூறியுள்ளார்.