• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதியின் உடல் அஞ்சலிக்காக 3 இடங்களில் வைக்கப்படுகிறது

August 7, 2018 தண்டோரா குழு

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் கோபாலபுரம், சி.ஐ.டி. காலனி இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.அதன் பின்னர் அதிகாலை கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இது குறித்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில்,

“தமிழர்களையெல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு விடைபெற்றுள்ள தமிழினத் தலைவர் கலைஞரின் உடல் இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை கோபாலபுரம் வீட்டிலும்,நள்ளிரவு 3 மணி வரை சிஐடி காலனி வீட்டிலும் வைக்கப்படும்.அங்கு,குடும்பத்தினர் மற்றும் உறவினர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நாளை (ஆக.,8) அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது”.

மேலும் படிக்க