• Download mobile app
09 May 2025, FridayEdition - 3376
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுக பொதுக்குழு ஒத்திவைப்பது குறித்து ஆலோசித்து முடிவேடுக்கப்படும் – துரைமுருகன்

December 16, 2016 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு திமுக பொதுக் குழுவை ஒத்திவைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து கடந்த டிசம்பர் 7 ம்தேதி வீடு திரும்பினார். இந்நிலையில், திடீரேனே நேற்று அவருக்கு உடல்நலக்குறைவு மூச்சு திணறல் ஏற்பட்டதால் வியாழன்று சென்னை காவேரி மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையெடுத்து, கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிவதற்காக சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்த திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஒளிவு மறைவின்றி அவரது உடல்நலம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் விளக்கமளித்தார்.

மேலும், திமுக பொதுக்குழு வரும் 20 ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறித்து கேட்டதற்கு, பொதுக்குழுவை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனக் கூறினார்.

மேலும் படிக்க