• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்! வாருங்கள் நீதி கேட்போம்! – இயக்குநர் ரஞ்சித் டுவீட்

November 17, 2018 தண்டோரா குழு

சாதி திமிருக்கு எதிராக திரள்வோம் வாருங்கள் நீதி கேட்போம் என இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் கடந்த 4 மாதங்களுக்கு காதல் திருமணம் செய்த நந்தீஷ் – சுவாதி தம்பதியினர் மாயமாகினர்.இதில்,நந்தீஷ் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.சுவாதி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.இந்நிலையில்,மாயமான இவர்கள் கர்நாடகாவில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருவரையும் சாதி ஆணவ கொலை செய்திருக்கலாம் என கருதி,போலீஸார் சுவாதியின் அப்பா ஸ்ரீனிவாஸ்,பெரியப்பா வெங்கடேஷ் மற்றும் கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில்,ஆணவக் கொலைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டங்கள் தெரிவித்து வருக்கின்றனர்.

இதுகுறித்து இயக்குனர் ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“இதோ நிகழ்ந்தேறி விட்டது இன்னுமொரு கொடுந்துயர சாதி ஆணவ படுகொலை.வாய் பேச முடியாத காளைகள் எங்கள் குடும்பத்தில் ஒன்று என போராடிய தமிழ் போராளி தோழமைகளே!வாய் பேச முடிந்த நந்தீஸ் – சுவாதி இவர்களை கொன்ற சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்!வாருங்கள் நீதி கேட்போம்!

தயவு செய்து தமிழக ஊடகங்களிடம் மன்றாடி கேட்டு கொள்கிறோம்.துடைத்து அப்புறப்படுத்த வேண்டிய சாதி கேவலத்துக்கு எதிராக முழுவீச்சில் வினையாற்றுவோம்.இன்னும் எத்தனை உயிர்களை ஆணவ சாதி தின்னப்போகிறது? இந்த கொடுந்துயருக்கு இப்போதே முடிவு கட்டுவோம்!சாதிக்கு_முடிவு_கட்டுவோம்.

திரையுலக மற்றும் முற்போக்கு எண்ணம் கொண்ட தோழமைகளே! விழித்துகொள்வோம்!இன்னும் இன்னும் நம் குடும்பங்கள்,நம் தெருக்கள்,நம் ஊர்கள்,நகரங்கள்,நம் நாடு என எல்லா இடங்களிலும் நீக்கமற இருக்கும் இந்த நூற்றாண்டின் கொடூம் இழிவு,இந்த சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்!” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க