சாதி திமிருக்கு எதிராக திரள்வோம் வாருங்கள் நீதி கேட்போம் என இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் கடந்த 4 மாதங்களுக்கு காதல் திருமணம் செய்த நந்தீஷ் – சுவாதி தம்பதியினர் மாயமாகினர்.இதில்,நந்தீஷ் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.சுவாதி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.இந்நிலையில்,மாயமான இவர்கள் கர்நாடகாவில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருவரையும் சாதி ஆணவ கொலை செய்திருக்கலாம் என கருதி,போலீஸார் சுவாதியின் அப்பா ஸ்ரீனிவாஸ்,பெரியப்பா வெங்கடேஷ் மற்றும் கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில்,ஆணவக் கொலைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டங்கள் தெரிவித்து வருக்கின்றனர்.
இதுகுறித்து இயக்குனர் ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“இதோ நிகழ்ந்தேறி விட்டது இன்னுமொரு கொடுந்துயர சாதி ஆணவ படுகொலை.வாய் பேச முடியாத காளைகள் எங்கள் குடும்பத்தில் ஒன்று என போராடிய தமிழ் போராளி தோழமைகளே!வாய் பேச முடிந்த நந்தீஸ் – சுவாதி இவர்களை கொன்ற சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்!வாருங்கள் நீதி கேட்போம்!
தயவு செய்து தமிழக ஊடகங்களிடம் மன்றாடி கேட்டு கொள்கிறோம்.துடைத்து அப்புறப்படுத்த வேண்டிய சாதி கேவலத்துக்கு எதிராக முழுவீச்சில் வினையாற்றுவோம்.இன்னும் எத்தனை உயிர்களை ஆணவ சாதி தின்னப்போகிறது? இந்த கொடுந்துயருக்கு இப்போதே முடிவு கட்டுவோம்!சாதிக்கு_முடிவு_கட்டுவோம்.
திரையுலக மற்றும் முற்போக்கு எண்ணம் கொண்ட தோழமைகளே! விழித்துகொள்வோம்!இன்னும் இன்னும் நம் குடும்பங்கள்,நம் தெருக்கள்,நம் ஊர்கள்,நகரங்கள்,நம் நாடு என எல்லா இடங்களிலும் நீக்கமற இருக்கும் இந்த நூற்றாண்டின் கொடூம் இழிவு,இந்த சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்!” என பதிவிட்டுள்ளார்.
ஜெர்மனியில் சத்குருவிற்கு வழங்கப்பட்ட “ப்ளூ டங்” விருது
இந்திய போட்டித் துறை ஆணையம் (CCI), ஆசியான் பேயிண்ட் கம்பெனிக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவு
கர்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் பல புற்றுநோய் பாதிப்புகளை தவிர்க்க சிறுவயதில் ஹெச்.பி.வி.தடுப்பூசி செலுத்திகொள்வது அவசியம் – பொதுமக்களுக்கு டாக்டர்கள் அறிவுரை
இந்தியாவில் முதன்முறையாக தேசிய அளவிலான குதிரையேற்ற லீக் போட்டி கோவையில் துவங்கியது
கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது
‘புதிய வேளாண் காடுகள் விதிகள்’ – நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு