• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

October 2, 2018 தண்டோரா குழு

சென்னை அபிராமபுரத்திலுள்ள இயக்குநர் மணிரத்தினத்தின் அலுவலகத்திற்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.

பிரபல இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் அர்விந்த் சாமி,சிம்பு,அருண் விஜய்,விஜய் சேதுபதி,பிரகாஷ் ராஜ், ஜோதிகா,ஐஸ்வர்யா ராஜேஷ் என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்த படம் செக்க சிவந்த வானம்.இப்படம் கடந்த 27ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில்,சென்னை அபிராமபுரத்தில் உள்ள இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும் எனக்கூறி மிரட்டல் விடப்பட்டுள்ளது.மிரட்டல் வந்ததை அடுத்து இயக்குனர் மணிரத்னம் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.இதனையடுத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க