• Download mobile app
13 Jun 2025, FridayEdition - 3411
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

October 2, 2018 தண்டோரா குழு

சென்னை அபிராமபுரத்திலுள்ள இயக்குநர் மணிரத்தினத்தின் அலுவலகத்திற்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.

பிரபல இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் அர்விந்த் சாமி,சிம்பு,அருண் விஜய்,விஜய் சேதுபதி,பிரகாஷ் ராஜ், ஜோதிகா,ஐஸ்வர்யா ராஜேஷ் என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்த படம் செக்க சிவந்த வானம்.இப்படம் கடந்த 27ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில்,சென்னை அபிராமபுரத்தில் உள்ள இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும் எனக்கூறி மிரட்டல் விடப்பட்டுள்ளது.மிரட்டல் வந்ததை அடுத்து இயக்குனர் மணிரத்னம் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.இதனையடுத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க