November 19, 2018
தண்டோரா குழு
டெல்டா மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
“நேற்று தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென் மேற்குவங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.நாளைமேற்கு நோக்கி நகர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி அருகே நிலைபெறும்.இதன் காரணமாக,இன்று மாலை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.நாகை,திருவாரூர்,தஞ்சை, புதுக்கோட்டை,சிவகங்கை,கடலூர்,ராமநாதபுரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.நாளை மற்றும் நாளை மறுநாள் உள்மாவட்டங்களிலும் மழைபெய்ய வாய்ப்பிருக்கிறது.சென்னையை பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பிருக்கிறது.மீனவர்கள் 20,21ம் தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 7 செ.மீ.,கோவை மாவட்டம்,மேட்டுபாளையத்தில் 6 செ.மீ., மழை பெய்துள்ளது”.இவ்வாறு கூறினார்.