• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

August 15, 2018 தண்டோரா குழு

இந்தியாவின் 72-வது ஆண்டு சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.72வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் இன்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அதனைத் தொடர்ந்து,செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் சுதந்திரதின உரையில் பேசிய பிரதமர் மோடி,

“இந்திய சுதந்திரத்திற்காக போராடிய அனைவருக்கும் என் வீரவணக்கம்.இந்த இனிய நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்.

உலக அளவில் இந்தியா முன்னேறி வருகிறது.உலகின் 6-வது பொருளாதார நாடாக இந்திய வளர்ந்துள்ளது.பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.அம்பேத்கர் கொடுத்த சட்டம் தான்,நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுகிறது.

நாட்டின் பல்வேறு இடங்களில் பருவமழை சிறப்பாக பெய்த நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து உள்ளது.இயற்கை சீற்றங்களால் பாதிப்பு அடைந்துள்ள மாநிலங்களுக்கு துணை நிற்க வேண்டும்”. இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க