• Download mobile app
13 Mar 2026, FridayEdition - 3684
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லியில் கனமழை போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்

August 30, 2016 தண்டோரா குழு

இந்திய தலைநகரான புது டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனால் இந்தியாவிற்கு வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி டெல்லி விமான நிலையத்தில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புது டெல்லியில் நேற்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால் அங்குள்ள பல முக்கிய இடங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.டெல்லி நகரச் சாலைகளில் சிக்கி கொண்ட வாகனங்கள் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றதால் பொதுமக்களும்,வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும்,இந்திய சுற்றுலாப் பயணத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கெர்ரியுடன் வந்த பத்திரிகையாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் புது டெல்லியில் பெய்த மழையால் மற்ற எல்லோரைப் போல் கெர்ரியும் அங்கு நேர்ந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கினர் என்று பதிவிட்டார்.

இந்நிலையில்,இந்தியாவுடன் வர்த்தகம் சம்பந்தமான பேச்சுவார்த்தைக்காக இந்திய வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய பின்பு கடுமழையால் ஏற்பட்ட போக்குரவத்து நெருக்கடியின் காரணமாக,விமான நிலையத்தில் இருந்து தெற்கு டெல்லியில் உள்ள சாணக்யபுரியில் உள்ள ஒரு விடுதிக்குச் செல்ல முடியாமல் தவித்து வருவதாகச் செய்திகள் வெளியாகின.

மேலும்,புது டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்றும் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டிப்பதால், இதே போன்ற போக்குவரத்து நெருக்கடி ஏற்படலாம் என்று டில்லி வாழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க