• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடியரசுத் தலைவருக்கு தில்லி பேரவை கோரிக்கை

November 15, 2016 தண்டோரா குழு

ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும் என்று கோரி, தில்லி சட்டப் பேரவையில் தீர்மானம் செவ்வாய்க் கிழமை நிறைவேற்றப்பட்டது.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாடு முழுவதும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வங்கி, அஞ்சலகங்களில் ரூபாய் நோட்டுகளை மாற்ற வரிசையில் மணிக்கணக்கில் பொதுமக்கள் நின்று வருகின்றனர்.

வணிகர்கள், சிறு, குறு தொழிற்சாலை நடத்துபவர்கள் என பலதரப்பு மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க தில்லி சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

பின்னர் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிடக் கோரியும் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க