• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடியரசுத் தலைவருக்கு தில்லி பேரவை கோரிக்கை

November 15, 2016 தண்டோரா குழு

ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும் என்று கோரி, தில்லி சட்டப் பேரவையில் தீர்மானம் செவ்வாய்க் கிழமை நிறைவேற்றப்பட்டது.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாடு முழுவதும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வங்கி, அஞ்சலகங்களில் ரூபாய் நோட்டுகளை மாற்ற வரிசையில் மணிக்கணக்கில் பொதுமக்கள் நின்று வருகின்றனர்.

வணிகர்கள், சிறு, குறு தொழிற்சாலை நடத்துபவர்கள் என பலதரப்பு மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க தில்லி சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

பின்னர் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிடக் கோரியும் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க