• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழலை கண்டித்து மாணவர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

September 29, 2018

ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழலை கண்டித்தும்,அதன் மீது விசாரணை நடத்தக் கோரியும் கோவை மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய பாரதிய ஜனதா அரசு பிரெஞ்சு அரசுடன் செய்துள்ள ரபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடும் ஊழலும் நடந்திருப்பதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

ரபேல் விமான ஒப்பந்தம் ஊழலை கண்டித்தும்,அதன் மீது விசாரணை நடத்தக்கோரியும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கோவையில் மாணவர் காங்கிரசார் சார்பாக தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இதில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கல்யாண் குமார் முன்னிலை வகித்தார்.இதில் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் V.M.C.மனோகரன் கலந்து கொண்டு பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் தற்போதைய பெட்ரோல் டீசல் விலை உயர்வு,ஜி.எஸ்.டி வரி விதிப்பு போன்ற மக்கள் விரோத கொள்கையை கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் படிக்க