• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

20 விநாடி முன்பே சென்றதால், மன்னிப்புக் கேட்ட ஜப்பான் ரயில்வே!

November 17, 2017

ஜப்பானில் சுமார் 2௦ வினாடிகளுக்கு முன்பே ரயில் புறப்பட்டு சென்றதற்காக, அந்நாட்டின் ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது பலருக்கும் ஆச்ச்ரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டில் உள்ள மினாமி பகுதியிலிருந்து நகரேயாமா பகுதிக்கு காலை 9.44.40 மணிக்கு சுகுபா விரைவு ரெயில் புறப்படுவது வழக்கம். ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை(நவ 14) காலை, மினாமி நாகரேயமா ரயில் நிலையத்திற்கு சுகுபா எக்ஸ்பிரஸ் சரியான நேரத்திற்கு வந்தது. அந்த ரயில்நிலையத்திலிருந்து காலை 9:44:40மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 9:44:20 மணிக்கே புறப்பட்டு சென்றுவிட்டது.

இதையடுத்து, இன்டர்சிட்டி ரயில்வே நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் அந்த நிறுவனம் கூறியிருப்பதாவது: “நவம்பர் 14அன்று, சுகுபா எக்ஸ்பிரஸ்20 வினாடிக்கு முன்பே சென்றுவிட்டது. இதனால், பயணிகள் சந்தித்த சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்புக் கேட்கிறோம்” என்று தெரிவித்திருந்தது.

மேலும்க,குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக புறப்பட்ட ரெயிலுக்காக ஜப்பான் ரெயில்வே பயணிகளிடம் மன்னிப்பு கேட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

மேலும் படிக்க