• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாலை பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து ஆடியோ வெளியீடு

July 26, 2018 தண்டோரா குழு

கோவையில் சாலை பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஆடியோவை கோவை மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா வெளியிட்டார்.

கோவையை சேர்ந்த சேகர் என்பவர்,இந்த ஆடியோவிற்கான பாடல் வரிகள் எழுதி பாடியுள்ளார். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியை தவிர்க்க வேண்டும்,வேகமாக வாகனத்தை இயக்கக்கூடாது,குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது போன்ற போக்குவரத்து விதிமுறைகள் அடங்கிய வரிகள் கொண்ட இந்த ஆடியோ 5நிமிட 23 நொடிகளுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே,கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு சாலை பாதுகாப்பு குறித்து வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் தற்போது ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது.கோவை மாவட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆடியோவை,கல்லூரி,பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. மேலும்,இந்த ஆடியோவை கொண்டு வீடியோவும் தயாராகி வருகிறது.சாலை விபத்துகளை தடுக்க மாநகர காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதன் ஒரு பகுதியாக இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க