• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 76 டாஸ்மாக் கடைகளுக்கு சீல்

August 21, 2018 தண்டோரா குழு

கோவையில் உரிமம் புதுப்பிக்கப்படாமல் செயல்பட்டு வந்த 76 டாஸ்மாக் மதுபானக் கூடங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவை மாநகரில் சுமார் 154 டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் இயங்கி வரும் நிலையில் மாதந்தோறும் தங்களுக்கான உரிமங்களை நிதி செலுத்தி புதுப்பிக்க வேண்டும்.ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக உரிமத்தை புதுப்பிக்காமல் 76 டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது

இதனையடுத்து சுமார் மூன்று கோடி ரூபாய் வரை நிலுவைத் தொகை மாவட்ட நிர்வாகத்திற்கு செலுத்தாததையடுத்து மாவட்ட வருவாய்த் துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மேலும்,காந்திபுரம்,ரத்தினபுரி,ஆர்.எஸ்.புரம்,உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கூடங்களுக்கு சீல் வைக்கும் பணியை வருவாய் துறையினர் 6 குழுவாக சென்று மேற்கொண்டனர்.சீல் வைத்தும் நிலுவைத் தொகையை செலுத்தாமல் மீண்டும் விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க