• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவல்துறை அதிகாரி மீது ஸ்ருதி பாலியல் புகார்

July 27, 2018 தண்டோரா குழு

மேட்ரிமோனியல் மூலமாக திருமணம் செய்து கொள்வதாகக் கூறி,பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து உள்ள நடிகை ஸ்ருதி,தன்னை பாலியல் ரீதியாக காவல்துறை அதிகாரி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

தமிழகத்தில் கோவை,சென்னை,நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் வெளிநாட்டில் பணியாற்றும் மென்பொறியாளர்களை குறிவைத்து மேட்ரிமோனியல் மூலம் தொடர்புக்கொண்டு திருமணம் செய்துக்கொள்வதாக கூறி சுமார் ரூ.2 கோடியே 5 லட்சத்து 85 ஆயிரம் மோசடி செய்ததாக கடலூரை சேர்ந்த நடிகை சுருதி,வளர்ப்பு தந்தை பிரசன்னா வெங்கடேசன்,தாய் சித்ரா,சகோதரர் சுபாஷ் ஆகிய நான்கு பேரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த ஜனவரி 11ஆம் தேதி கோவையில் கைது செய்தனர்.

இந்நிலையில் சுருதி உட்பட 4 பேருக்கும் ஜாமீன் கிடைத்தது.தற்போது ஜாமீனில் வெளியே வந்து உள்ள சுருதி,கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

காவல் துறையினர் ஏழு நாட்களுக்கு காவலில் எடுத்து,விசாரிக்கும் போது தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும்,தன்னை நிர்பயாவை போல பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசி சென்று விடுவோம் எனக் கூறி மிரட்டியதாக பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட காவல் நிலையத்தின் அனைத்து சிசிடிவி கேமராக்களையும்,காகிதத்தை கொண்டு மறைத்து வைத்து தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும்,குறிப்பாக கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறை துணை ஆணையாளர் தன்னை அவரது ஆசைக்கு இணங்குமாறு கூறியதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

மேலும் இரண்டு பெண் காவலர்களும் உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் என தெரிவித்து வற்புற்த்தியதாகவும் கூறினார்.திருமணம் செய்து கொள்ள மறுத்ததற்காக சிலர், வேண்டுமென்றே இதுபோன்று பொய் வழக்கு போட்டு உள்ளதாகவும்,இந்த வழக்கில் கூறப்பட்டது போல எந்த பணமும் யாரிடமும் வாங்கவில்லை என அவரது தாயார் தெரிவித்தார்.

தற்போது ஜாமீனில் வெளியாகி இருந்தாலும்,தன்னை கொலை செய்து விடுவதாக காவல் துறையினர் மிரட்டல் விடுப்பதாக ஸ்ருதி தெரிவித்தார்.இந்நிலையில் தனக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் பெண்கள் நல ஆணையத்திற்கு புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார்.

மேலும் படிக்க