• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சங்கரா கல்லூரியில் சுழலும் சொல்லரங்கம் என்னும் பெயரில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

December 28, 2017 தண்டோரா குழு

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் கோவை கம்பன் கழகமும் வெங்கடேஷ்வரா கல்வி அறக்கொடை அறநிலையம் மற்றும் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து, சுழலும் சொல்லரங்கம் என்னும் பெயரில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பூ.மு.அன்புசிவா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் எச்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோவை கம்பன் கழகச் செயலர் “கம்பன் கலைச்செம்மல்” நா.நஞ்சுண்டன் தொகுப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசும்போது மாணவர்களை சிறந்த பண்பாடு உள்ளவர்களாக மாற்றவும் அவர்களின் பேச்சாற்றலை வளர்க்கவும் ஆண்டுதோறும் கல்லூரிகளில் கம்பன் விழா நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.

நிகழ்ச்சியில், கோவை அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் சு.அரவிந்தன் அறிமுகவுரையாற்றினார். பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோவை கம்பன் கழகச் செயலர் “கம்பன் கலைச்செம்மல்” நா.நஞ்சுண்டன் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வங்கினார்.

மேலும் விழாவில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை முனைவர் சு.அட்சயா நன்றி உரையாற்றினார்.

மேலும் படிக்க